மாடியிலிருந்து தூக்கி வீசி மரண தண்டனை: அதிர்ச்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டது ஐ.எஸ்.

மாடியிலிருந்து தூக்கி வீசி மரண தண்டனை: அதிர்ச்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டது ஐ.எஸ்.

சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்காவில் திரளான மக்கள் கூட்டம் ஒரு மனிதனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை பார்ப்பதற்காக நீதிமன்றத்தின் முன் காத்திருக்கிறது. கூட்டத்தில் முன்னால் இருப்பவர்கள் மறைத்து விடுவார்கள் என்பதால் சிலர் சுவர்களில் ஏறி நின்றபடி தண்டனையை காண காத்திருக்கின்றனர். 

கூட்டத்தில் சிறுவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கண்ணெதிரே அந்த கொடூர மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த மனிதன் இனி செய்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் தன் வாழ்வின் இறுதி நிமிடத்தை நினைத்து மரண பயத்துடன் நிற்கிறார். பின்னர் அவர் கண், கை, கால்கள் கருப்பு துணியால் கட்டிய நிலையில் நீதிமன்றத்தின் மாடியிலிருந்து தூக்கி எறியப்படுகிறார். கீழே விழுந்த அவரை பார்வையாளர்கள் கல்லால் அடிக்கின்றனர். அதை உணர முடியாத அவர், தரையில் விழுந்த சில நொடிகளிலேயே இறந்து போகிறார்.

இந்த தண்டனை நிறைவேற்றப்படும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இதே நீதிமன்றத்தின் மாடியிலிருந்து இதே போன்று ஒருவருக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top