
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குமரன் யானை உடல் நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தது. இறந்த யானைக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
2 யானைகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை, குமரன் ஆகிய 2 யானைகள் இருந்தன. தெய்வானைக்கு 17 வயது ஆகிறது. குமரனுக்கு 13 வயது ஆனது.
சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் யானைகள் நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்தது. இந்த முகாமிற்கு அனுப்புவதற்காக தெய்வானை, குமரன் ஆகிய 2 யானைகளுக்கும் கால்நடை டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை செய்தனர்.

அப்போது குமரன் யானைக்கு மதநீர் ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. முகாமிற்கு சென்ற இடத்தில் யானைக்கு மதம்பிடித்துவிட்டால் சமாளிப்பது கடினம் என்று கருதி அந்த யானையை, முகாமுக்கு அனுப்புவதற்கு கால்நடை டாக்டர்கள் சான்றிதழ் வழங்கவில்லை.
திடீர் மரணம்
இதனால் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு தெய்வானை யானை மட்டும் சென்று வந்தது. குமரன் யானையை அதன் பாகன் செந்தில்குமார், உதவியாளர் உதயன் ஆகியோர் கவனித்து வந்தனர். குமரன் யானை வழக்கம்போல் உற்சாகமாக கோவிலில் வலம் வந்தது. திடீரென கடந்த 2 நாட்களாக குமரன் எதுவும் சாப்பிடவில்லை. நேற்று காலையில் யானை பாகன் செந்தில்குமார், யானையை பார்க்க சென்றபோது, அது உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்தது. இதைக்கண்டு பாகன் அதிர்ச்சி அடைந்தார். கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.
கண் கலங்கினார்கள்
இது தொடர்பாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் நந்தகோபால், திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் ரோஜர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். டாக்டர்கள் யானையை பரிசோதித்ததில், குமரன் யானை இறந்தது உறுதி செய்யப்பட்டது. கால்நடை டாக்டர்கள் பொன்ராஜ் (திருச்செந்தூர்), சுரேஷ் (ஆழ்வார்திருநகரி), செந்தில் கண்ணன் (அம்மன்புரம்) ஆகியோர் இறந்த குமரன் யானையின் காலில் இருந்து சிறிதளவு ரத்தத்தையும், யானையின் சாணத்தையும் சேகரித்தனர். பின்னர் அவற்றை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வக பரிசோதனையின் முடிவில் குமரன் யானை எவ்வாறு இறந்தது? என்பது குறித்து தெரியவரும் என்று கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்ததை அறிந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் யானை பாகன் கள், பக்தர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். இறந்த யானையை பார்த்து கண் கலங்கினார்கள். கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இந்து சமய அறநிலைய துறை இணை
ஆணையர்கள் ஞானசேகர், அன்புமணி, கோவில் தக்காரின் மனைவி சங்கரி, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், வியாபாரிகள் திரண்டு வந்து, இறந்த குமரன் யானைக்கு மாலை அணிவித்து, கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனால் கோவில் வளாகம் சோகத்தில் மூழ்கியது.
உடல் அடக்கம்
இறந்த குமரன் யானையை மாலை 4.30 மணியளவில் கிரேன் மூலம் லாரியில் ஏற்றினர். பின்னர் கோவில் வளாகத்தில் யானையின் இறுதி ஊர்வலம் நடந்தது. கோவில் வளாகத்தில் ஜெயந்திநாதர் விடுதியின் அருகில் உள்ள இடத்தில், கிரேன் மூலம் குமரன் யானையை கீழே இறக்கினர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோவில் யானையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகில், குமரன் யானையையும் அடக்கம் செய்தனர்.

நடை அடைப்பு
குமரன் யானையின் மறைவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை மாலை 4.30 மணிக்கு அடைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டன
2 யானைகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை, குமரன் ஆகிய 2 யானைகள் இருந்தன. தெய்வானைக்கு 17 வயது ஆகிறது. குமரனுக்கு 13 வயது ஆனது.
சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் யானைகள் நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்தது. இந்த முகாமிற்கு அனுப்புவதற்காக தெய்வானை, குமரன் ஆகிய 2 யானைகளுக்கும் கால்நடை டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை செய்தனர்.

அப்போது குமரன் யானைக்கு மதநீர் ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. முகாமிற்கு சென்ற இடத்தில் யானைக்கு மதம்பிடித்துவிட்டால் சமாளிப்பது கடினம் என்று கருதி அந்த யானையை, முகாமுக்கு அனுப்புவதற்கு கால்நடை டாக்டர்கள் சான்றிதழ் வழங்கவில்லை.
திடீர் மரணம்
இதனால் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு தெய்வானை யானை மட்டும் சென்று வந்தது. குமரன் யானையை அதன் பாகன் செந்தில்குமார், உதவியாளர் உதயன் ஆகியோர் கவனித்து வந்தனர். குமரன் யானை வழக்கம்போல் உற்சாகமாக கோவிலில் வலம் வந்தது. திடீரென கடந்த 2 நாட்களாக குமரன் எதுவும் சாப்பிடவில்லை. நேற்று காலையில் யானை பாகன் செந்தில்குமார், யானையை பார்க்க சென்றபோது, அது உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்தது. இதைக்கண்டு பாகன் அதிர்ச்சி அடைந்தார். கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

கண் கலங்கினார்கள்
இது தொடர்பாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் நந்தகோபால், திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் ரோஜர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். டாக்டர்கள் யானையை பரிசோதித்ததில், குமரன் யானை இறந்தது உறுதி செய்யப்பட்டது. கால்நடை டாக்டர்கள் பொன்ராஜ் (திருச்செந்தூர்), சுரேஷ் (ஆழ்வார்திருநகரி), செந்தில் கண்ணன் (அம்மன்புரம்) ஆகியோர் இறந்த குமரன் யானையின் காலில் இருந்து சிறிதளவு ரத்தத்தையும், யானையின் சாணத்தையும் சேகரித்தனர். பின்னர் அவற்றை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வக பரிசோதனையின் முடிவில் குமரன் யானை எவ்வாறு இறந்தது? என்பது குறித்து தெரியவரும் என்று கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்ததை அறிந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் யானை பாகன் கள், பக்தர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். இறந்த யானையை பார்த்து கண் கலங்கினார்கள். கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இந்து சமய அறநிலைய துறை இணை

இதனால் கோவில் வளாகம் சோகத்தில் மூழ்கியது.
உடல் அடக்கம்
இறந்த குமரன் யானையை மாலை 4.30 மணியளவில் கிரேன் மூலம் லாரியில் ஏற்றினர். பின்னர் கோவில் வளாகத்தில் யானையின் இறுதி ஊர்வலம் நடந்தது. கோவில் வளாகத்தில் ஜெயந்திநாதர் விடுதியின் அருகில் உள்ள இடத்தில், கிரேன் மூலம் குமரன் யானையை கீழே இறக்கினர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோவில் யானையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகில், குமரன் யானையையும் அடக்கம் செய்தனர்.

நடை அடைப்பு
குமரன் யானையின் மறைவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை மாலை 4.30 மணிக்கு அடைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டன
No comments :