
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
. வடமேற்கு நைஜீரியாவில் பல நகரங்களை தங்கள் வசம் வைத்துள்ளன. அவற்றை மீட்க நைஜீரிய ராணுவத்துக்கு அண்டைநாடுகளான சாட் மற்றும் நைஜர் நாடுகள் உதவுகின்றன. அவர்கள் உதவியுடன் சமீபத்தில் டமாசக் என்ற நகரம் மீட்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலைவனப் பகுதியில் 70–க்கும் மேற்பட்டடோரின் பிணங்கள் கிடந்தன. அவர்களில் பலரது தொண்டை அறுக்கப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் இருந்தது. இவர்கள் யார் என தெரிய வில்லை.
No comments :