
நடிகர் : நந்தா
நடிகை : சனம் ஷெட்டி
இயக்குனர் : பாபு தூயவன்
இசை : தாஜ்நூர்
ஓளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்
நடிகை : சனம் ஷெட்டி
இயக்குனர் : பாபு தூயவன்
இசை : தாஜ்நூர்
ஓளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்
பொள்ளாச்சி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நட்ராஜ். பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இவர், தொகுதி எம்.பி.யுடன் சேர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார். இவரைக் கண்டால் ஊர் மக்கள் அலறுகின்றனர். இவர் தனது நடத்தையால் ஊர் மக்களின் சாபத்திற்கும் ஆளாகிறார்.
இந்நிலையில் சென்னையில் எஸ்.ஐ.ஆக இருக்கும் நந்தாவிற்கு பொள்ளாச்சியில் நட்ராஜ் வேலை பார்க்கும் ஸ்டேசனுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. மிகவும் நேர்மையான நந்தா, பொள்ளாச்சிக்கு வந்து இறங்கியதும், அங்கு நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கிறார். இதனால் நட்ராஜுக்கும் நந்தாவிற்கும் மோதல் ஏற்படுகிறது.
நட்ராஜை பற்றி உயர் அதிகாரிகளிடம் சொல்லி அவரை திருத்தப் பார்க்கிறார் நந்தா. ஆனால், உயர் அதிகாரிகளோ நட்ராஜின் கூட்டாளியாக இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த தொகுதி எம்.பி. சீட்டு நிறுவனம் நடத்தி, மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி அடைய பார்க்கிறார். இதற்கு நட்ராஜும் உடந்தையாக இருக்கிறார். இந்தப் பணத்தை எப்படியாவது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக நட்ராஜையும் எம்.பி.யையும் தந்திரமாக ஊடகங்களில் சிக்க வைக்கிறார் நந்தா.
ஆனால் தப்பித்தால் போதும் என்று நினைத்த நட்ராஜ், தான் மிகவும் கஷ்டப்பட்டு பிடித்ததாகவும், பணம் அனைத்தும் மக்களிடம் சேரும் என்றும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் எம்.பி., நட்ராஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். அதன்படி, நட்ராஜை ஆட்களை வைத்தும் தாக்குகிறார். உயிருக்குப் போராடும் நிலையில் நட்ராஜை மருத்துவமனையில் சேர்க்கிறார் நந்தா. அங்கு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நட்ராஜை காப்பாற்றுகிறார்கள்.
தங்களின் பணம் எல்லாம் திரும்ப கிடைக்க வைத்த நட்ராஜை மக்கள் அனைவரும் மிகவும் மதிக்கிறார்கள். இதனால் நட்ராஜ் மனம் திருந்தி, இனி மக்களுக்காக வாழ்வேன் என்று முடிவெடுக்கிறார். இதனால் எம்.பி.யை எதிர்த்து அவரை அழிக்க நினைக்கிறார்.
இறுதியில் எம்.பி.யை நட்ராஜ் அழித்தாரா? நட்ராஜ்-நந்தா இடையேயான மோதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
படத்தில் நட்ராஜ் பேசும் வசனங்கள் ரஜினியை ஞாபகப்படுத்துகிறது. மிகவும் யதார்த்தமாக வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக பளிச்சிடுகிறார் நந்தா. எல்லா காட்சிகளிலும் கோபத்துடனே வரும் இவருக்கு, நாயகியுடனான காட்சிகளில் மட்டும் சற்று சிரிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சனம் ஷெட்டிக்கு குறைவான காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சாரிகா, நிழல்கள் ரவி, சிங்க முத்து, கிரேன் மனோகர், வினோத் ஆகியோர் அவர்களுக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்கள்.
போலீஸ் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் பாபு தூயவன், அதில் திறம்பட திரைக்கதை அமைத்திருக்கிறார். போலீஸ்காரர்களின் வாழ்க்கையை வேறு கோணத்தில் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கிடையேயான வேற்றுமையை அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.
No comments :