
புது டெல்லி - ஸ்பெக்ட்ரம் ஏலம் அதிகரிப்பால் செல்போன் கட்டணத்தை உயர்த்த செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது
. இந்த ஆண்டு செல்போன் நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிப்பதற்கான ஏலம் கடந்த சில நாட்களாக நடந்தது. இது கடந்த முறையை காட்டிலும் பல மடங்கு கூடுதல் தொகைக்கு ஏலம் போய் உள்ளது. எனவே செல்போன் கட்டணம் உயரும் என்று கடன்த வாரம் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது.
ஆனால் செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஏலம் அதிக தொகைக்கு சென்று இருப்பதால் செல்போன் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் இருக்கிறோம் என்று கூறியது. எனவே செல்போன் கட்டணத்தை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு காத்து இருப்பதாக செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், செல்போன் கட்டண விகிதத்தை மத்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அமைப்புதான் முடிவு செய்யும். ஒரு நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.
No comments :