நடிப்பித்துறையை விட்டு விலகும் நடிகைகள் விஜயலட்சுமி

நடிப்பித்துறையை விட்டு விலகும் நடிகைகள் திருமணம் அல்லது படிப்பை தொடர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு நடிகை திரைப்பட துறை சார்ந்த வேலையை தொடரவுள்ளார். 

தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600 028’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகளாவார். இப்படத்தை தொடர்ந்து ‘அஞ்சாதே’, அதேநேரம் அதே இடம், வெண்ணிலா வீடு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

மேலும் வனயுத்தம் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. மேலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெண்டாவது படம்’ முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், நடிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக விஜயலட்சுமி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, இனி படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும். படங்களில் நடிக்காவிட்டாலும் திரைத்துறையில்தான் தொடர்ந்து இருப்பேன் என்றும் கூறியுள்ளாராம். 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top