
சென்னை,
ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு நடிகை அஞ்சலி ரூ.1 கோடி சம்பளம் கேட்டார்.
நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு ஓடிப்போனார். ஆந்திராவில் அவர் அடைக்கலம் புகுந்தார். பிறகு திடீரென்று காணாமல் போனார். அவர் எங்கே போனார், என்ன ஆனார்? என்பது மர்மமாக இருந்தது.அஞ்சலி அமெரிக்கா சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் அவர் ரகசியமாக குடித்தனம் நடத்துவதாக இன்னொரு தகவல் சொன்னது.
இந்த நிலையில், அஞ்சலி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அஞ்சலி முன்பை விட இப்போது கவர்ச்சியாக தெரிவதால், அவரை ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அழைக்கிறார்கள்.
சூர்யாவுடன், சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆடினார். இதற்காக ஒரு பெரும் தொகை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது. இப்போது ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட, அஞ்சலிக்கு அழைப்பு வந்து இருக்கிறது. இதற்காக, அஞ்சலி ரூ.1 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். ’’ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், ஆடுகிறேன். முடியாது என்றால் வேறு நடிகையை பாருங்கள்’’ என்று அவர் கூறியிருக்கிறார்.
அஞ்சலிக்கு ரூ.1 கோடி கொடுத்து ஆட வைப்பதா, வேண்டாமா? என்று தெலுங்கு படக்குழு யோசித்து வருகிறது.
ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு நடிகை அஞ்சலி ரூ.1 கோடி சம்பளம் கேட்டார்.
நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு ஓடிப்போனார். ஆந்திராவில் அவர் அடைக்கலம் புகுந்தார். பிறகு திடீரென்று காணாமல் போனார். அவர் எங்கே போனார், என்ன ஆனார்? என்பது மர்மமாக இருந்தது.அஞ்சலி அமெரிக்கா சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் அவர் ரகசியமாக குடித்தனம் நடத்துவதாக இன்னொரு தகவல் சொன்னது.
இந்த நிலையில், அஞ்சலி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அஞ்சலி முன்பை விட இப்போது கவர்ச்சியாக தெரிவதால், அவரை ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அழைக்கிறார்கள்.
சூர்யாவுடன், சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆடினார். இதற்காக ஒரு பெரும் தொகை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது. இப்போது ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட, அஞ்சலிக்கு அழைப்பு வந்து இருக்கிறது. இதற்காக, அஞ்சலி ரூ.1 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். ’’ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், ஆடுகிறேன். முடியாது என்றால் வேறு நடிகையை பாருங்கள்’’ என்று அவர் கூறியிருக்கிறார்.
அஞ்சலிக்கு ரூ.1 கோடி கொடுத்து ஆட வைப்பதா, வேண்டாமா? என்று தெலுங்கு படக்குழு யோசித்து வருகிறது.
No comments :