ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது' பிரதமர் மோடி பேச்சு


'ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய - அமெரிக்க தொழில் அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசினர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், அனைத்து மிகப்பெரிய திட்டங்களையும் பிரதமர் அலுவலகம் கண்காணிக்கும். இந்தியாவில் வணிகம் செய்ய சிறந்த சூழலை ஏற்படுத்தித்தர அரசு விரும்புகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை அரசு நீக்கும். ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது. நாட்டின் பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற 6 மாதத்தில் இந்தியாவில் அமெரிக்க முதலீடு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தூய்மையான எரிசக்தியைபெற உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்திய வேளாண் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். திறமை, நோக்கம் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். மிகப்பெரிய திட்டங்கள் பிரதம அலுவலகத்தால் கண்காணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இந்தியா முழு சாத்திய கூறுகளையும் கொண்டுள்ளது, நாம் திறமை மற்றும் நோக்கம் கொண்டுள்ளோம்.

கடந்த 8 மாதங்களாக நான் மக்களின் தீர்ப்பை நிறைவுசெய்ய, அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முழுவதுமாக பணியாற்றினேன். நமது பணி மிகவும் பெரியது. இது ஒரே இரவில் நடக்காது. நாம் நமது சவால்களை அறிந்துள்ளோம், ஆனால் நாம் நமது அதிக வெற்றிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம்.
நீங்கள் ஒரு திறந்த சூழலை தேடினால், நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம் மற்றும் உங்களுடைய திட்டத்தில் உங்களுடன் பயணிப்போம். நம்மிடம் இளைஞர்கள் சக்தி உள்ளது. பசுமை புரட்சி இலைக்கை எட்ட இந்தியர்கள் கடுமையாக உழைத்துள்ளோம். பொருளாதாரம் 8 கோடி, பிரதான துறைகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 110 மில்லியன் புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலகபொருளாதாரத்தை ஸ்திரமாக்குவதில் முக்கிய நங்கூரமாக இந்தியா இருக்கும். இந்தியா-அமெரிக்க ஒன்றாக இணைந்து இந்த உலகை அனைவருக்கும் நல்லதாக உருவாக்கும். என்று கூறினார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உரையாற்றினார். இந்தியர்கள் உலகம் முழுவதும் தொழில் நிறுவங்களை தொடங்க வேண்டும். இந்தியர்களின் திறமை இந்தியாவை தாண்டி செல்ல வேண்டும். அமெரிக்கா இந்தியாவில் முதலீடு செய்கிறது, ஆனால் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்கிறனர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்பமுடியாத வணிக திறமையாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இயற்கையான இணைப்பு உள்ளது. உலகம்முழுவதும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நம்பமுடியாத நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். நாங்கள் இந்தியாவுடன் நல்ல வர்த்தகத்தை கொண்டுள்ளோம். வர்த்தகம் அதிகரிப்பது இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும். வர்த்தகம் அதிகரிப்பு இந்தியாவிற்கு வெற்றி, மேலும் அமெரிக்கர்கள் செய்த இயந்திரங்களால் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்த முடியும். நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் பற்றிய உரையாடலை மீண்டும் தொடங்க நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 1 பில்லியன் டாலருக்கு அதிகமாக கடன் வழங்க ஓப்பெக் ஆதரவு தெரிவிக்கும். என்று கூறினார். தொடர்ந்து முக்கிய அம்சங்கள் குறித்து அதிபர் ஒபாமா பேசினார்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top