
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் இந்திரதனுஷ் முகாம் முதற்கட்டமாக எட்டு மாவட்டங்களில் ஏப்ரல்
7-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, தட்டம்மை, நிமோனியா மற்றும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இந்த தடுப்பூசி முகாம் முதற்கட்டமாக கோவை, திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, வேலூர், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
No comments :