
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் பாலிவுட் திரையுலகத்தை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனர்கள் ஹன்சல் மித்ரா, சுதிர் மிஸ்ரா தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் பற்றிய அவர்களது விமர்சனங்கள் பின்வருமாறு:-
இயக்குனர் ஹன்சல் மேத்தா
பொழுதுபோக்கு வரி அதிகரிப்பு சினிமா டிக்கெட்டுகளின் விலையை அதிகமாக்கும். சேவை வரி அதிகரித்திருப்பது சினிமா தயாரிக்கும் பட்ஜெட்டை அதிகமாக்கும். திரைப்படங்கள் என்றாலே பணம் சம்பாதிப்பது என்று அர்த்தம் கிடையாது. அரசு திரைத்துறையை கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் படங்களில் சொல்ல வரும் விஷயங்களை கட்டுப்படுத்துவதிலேயே அதிக அக்கரை காட்டுகிறது. எங்களிடம் இருந்து வரியாக வாங்கும் பணத்தில் எதுவும் செய்வதில்லை.
இயக்குனர் அசோக் பண்டிட்
இந்த பட்ஜெட்டில் திரைத்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு பொழுதுபோக்கு துறைக்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த அரசாங்கம் திரை நட்சத்திரங்களை தங்களுடைய நிகழ்ச்சிகளிலும், மாநிலங்களை புரோமோட் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், திரைத்துறைக்கு மட்டும் எதையும் செய்வதில்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பொழுதுபோக்கு துறைக்கும் பெரும்பங்கு உண்டு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் இது எங்களுக்கு சோகமான பட்ஜெட்.
இயக்குனர் சுதிர் மிஸ்ரா
சினிமாவுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால், இந்தியாவுக்கு அது ஒரு உந்து சக்தியை தரும்.
இயக்குனர் சூபர்ன் வெர்மா
திரைத்துறைக்கு எந்த ஒரு விஷயமும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
No comments :