
உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியதாவது:–
சச்சின் தெண்டுல்கர் (இந்தியா): ‘இந்திய அணி, இந்த போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியது. ரசிகர்களும் இதை அனுபவித்து மகிழ்ந்தனர். இருப்பினும் எப்போதும் தோல்வியை சகித்துக் கொள்வது கஷ்டமானது தான். இந்தியாவுக்கு இது கடினமான போட்டியாக அமைந்துவிட்டது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டீவன் சுமித்தின் சதம், அவருக்கு ஆரோன் பிஞ்ச் கொடுத்த பார்ட்னர்ஷிப், ஜான்சனின் கடைசி கட்ட அதிரடி பேட்டிங் ஆகியவை இணைந்து இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டன.
ராகுல் டிராவிட் (இந்தியா): சிறந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதாக கருதுகிறேன். அவ்விரு அணிகளிலுமே மிகச்சிறந்த கேப்டன்கள் உள்ளனர். இங்குள்ள சூழலுக்கும் அவர்கள் தான் பொருத்தமானவர்கள்.
சவுரவ் கங்குலி (இந்தியா): சிறந்த அணியால் இந்தியா ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு முதல் அதிர்ஷ்டம் டாசை ஜெயித்து ஆகும். அடுத்ததாக இந்தியாவுக்கு 329 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோர் குவித்திருந்தால், ஆஸ்திரேலியாவுக்கும் நெருக்கடி தான் ஏற்பட்டிருக்கும். நம்மை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு கட்டுக்கோப்பாக இருந்தது.
ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா): ரோகித் சர்மாவும், தவானும் நல்ல தொடக்கம் அளித்தனர். இதனால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. ஆனால் மொத்தத்தில் இது போன்ற பெரிய ஸ்கோரை விரட்டிப்பிடிக்க வேண்டும் என்றால் முதல் 4 வீரர்களில் யாராவது ஒருவர் காண வேண்டியது முக்கியம். விராட் கோலி வந்த வேகத்தில் மோசமாகவும் அவுட் ஆகி சென்றது, இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
சச்சின் தெண்டுல்கர் (இந்தியா): ‘இந்திய அணி, இந்த போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியது. ரசிகர்களும் இதை அனுபவித்து மகிழ்ந்தனர். இருப்பினும் எப்போதும் தோல்வியை சகித்துக் கொள்வது கஷ்டமானது தான். இந்தியாவுக்கு இது கடினமான போட்டியாக அமைந்துவிட்டது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டீவன் சுமித்தின் சதம், அவருக்கு ஆரோன் பிஞ்ச் கொடுத்த பார்ட்னர்ஷிப், ஜான்சனின் கடைசி கட்ட அதிரடி பேட்டிங் ஆகியவை இணைந்து இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டன.
ராகுல் டிராவிட் (இந்தியா): சிறந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதாக கருதுகிறேன். அவ்விரு அணிகளிலுமே மிகச்சிறந்த கேப்டன்கள் உள்ளனர். இங்குள்ள சூழலுக்கும் அவர்கள் தான் பொருத்தமானவர்கள்.
சவுரவ் கங்குலி (இந்தியா): சிறந்த அணியால் இந்தியா ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு முதல் அதிர்ஷ்டம் டாசை ஜெயித்து ஆகும். அடுத்ததாக இந்தியாவுக்கு 329 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோர் குவித்திருந்தால், ஆஸ்திரேலியாவுக்கும் நெருக்கடி தான் ஏற்பட்டிருக்கும். நம்மை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு கட்டுக்கோப்பாக இருந்தது.
ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா): ரோகித் சர்மாவும், தவானும் நல்ல தொடக்கம் அளித்தனர். இதனால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. ஆனால் மொத்தத்தில் இது போன்ற பெரிய ஸ்கோரை விரட்டிப்பிடிக்க வேண்டும் என்றால் முதல் 4 வீரர்களில் யாராவது ஒருவர் காண வேண்டியது முக்கியம். விராட் கோலி வந்த வேகத்தில் மோசமாகவும் அவுட் ஆகி சென்றது, இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
No comments :