பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. லிட்டருக்கு பெட்ரோல் விலை 49 காசுகளும், டீசல் விலை ரூ. 1.21-ம் குறைக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது முதல் முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மாநில வரி விதிப்பு முறைகளுக்கு ஏற்ப விலை குறைப்பு இருக்கும்.
இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
டெல்லியில் ரூ.60.49-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.60-க்கும், ரூ.49.71-க்கு விற்கப் பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.48.50-க்கும் விற்பனை செய்யப்படும்.
இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் முன்பாக கடந்த 2014 ஆகஸ்ட் மாதத்திலிருந்து பெட்ரோல் விலை 10 முறை குறைக்கப்பட்டது. 2014 அக்டோபரிலிருந்து 6 முறை டீசல் விலை குறைக்கப்பட்டது.
10 முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதில் ஒட்டுமொத்த மாக லிட்டருக்கு ரூ.17.11 குறைந்தது. இதேபோல டீசல் விலையை 6 முறை குறைத்த தில் லிட்டருக்கு ரூ.12.96 குறைந்தது. அத்துடன் டீசல் விலையை சந்தை விலை அடிப்படையில் விற்பனை செய்யும் நடைமுறை கடந்த அக்டோபரிலிருந்து அமலுக்கு வந்தது.
கடந்த நவம்பரில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 7.75-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 7.50-ம் உயர்த்தப்பட்டது.
No comments :