மும்பை ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வெடிகுண்டு மிரட்டல்.


வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக மும்பையில் ரெயில் நிலையங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Image for the news resultவெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் கூட்ட நெரிசல் மிகுந்த ரெயில் நிலையங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மாநில உளவுத்துறைக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
தாக்குதல்காரர்கள் கடல் வழியாக மும்பையில் ஊடுருவி, தங்களது திட்டத்தை அரங்கேற்றலாம் என்று உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ரெயில்வே கமிஷனர் மற்றும் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
இதன்பேரில், முக்கியமான ரெயில் நிலையங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, அந்த கடிதம் யாரிடம் இருந்து அனுப்பப்பட்டது என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் இடையே ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top