சார் நிலை கருவூலத்தில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது




ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் ரோட்டில் சார்நிலை கருவூலம் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20–ந்தேதி அன்று மர்ம ஆசாமிகள் கருவூலத்தின் இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த கோர்ட்டு வழக்குகளுக்கு சம்பந்தமான பணம்–நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மதுரை சரக டி.ஐ.ஜி.சோமானி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளையன் மற்றும் 5 தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் தேடுதல்வேட்டை நடத்தி சிவகாசியை சேர்ந்த, கொள்ளையில் சம்பந்தப்பட்ட முருகேசன் மகன் சுப்புராஜ் (வயது 25), முதலிப்பட்டியை சேர்ந்த ஊர்காவலன் மகன் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தனிப்படை போலீசார் முத்து காமாட்சி (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top