ஷன்கிஷா மாகாண தலைநகரான ஹுனான் பகுதியில், கண்ணாடி மற்றும் இரும்பாலான இக்கட்டிடம் ஒரு நாளுக்கு 3 மாடிகள் என்கிற விகிதத்தில் மொத்தம் 57 மாடிகளையும் கட்டி முடித்து இருக்கிறார்கள். மற்ற கட்டிடங்களை போல கல், மணல், சிமெண்ட் போன்றவற்றை பயன்படுத்தி நேரடியாக கட்டாமல், கட்டுமானத்திற்கு தேவையான அனைத்தையும் நான்கரை மாதங்கள் செலவு செய்து முன்பே தயாரித்து, அவற்றை கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வந்து சரியான முறையில் ஒன்றிணைப்பதன் மூலம் இச்சாதனையை செய்துள்ளார்கள்.
220 மாடிகளை கொண்ட கட்டிடத்தை 3 மாதங்களில் கட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் அடுத்த இலக்கு என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments :