செல்போன் மற்றும் தொலைபேசி வைத்திருப்பவர்கள் இனி நாடு முழுவதும் பேச முன் இணைப்பாக 91 மற்றும் 0 எனும் எண்களை டயல் செய்யாமல் பேசும் வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் உத்தரவைத் தொடர்ந்து, பெரும்பாலான, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முழுமையான எம்.என்.பி வசதியை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. மத்திய தொலைத் தொடர்பு துறை சமீபத்தில் அறிவித்த தேசிய எண் திட்டம் (என்.என்.பி) திருத்தத்தின்படி, நாடு முழுவதும் முழுமையான எம்.என்.பி திட்டத்தை அதாவது, செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இம்மாதம் 3-ம் தேதி வரை கெடு விதித்திக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் முழுமையான எம்.என்.பி.யை செயல்படுத்தாததால், அந்த காலக்கெடுவை ஜூலை மாதம் வரை மத்திய தொலைத்தொடர்பு துறை நீட்டித்தது.
இந்த முழுமையான எம்.என்.பி திட்டம், தேசிய எண் திட்டம் (என்.என்.பி) கொள்கையின் படி, தொலைபேசி மற்றும் செல்போனில் வாயிலாக நாட்டின் எந்த இடத்திற்கு பேசும் போதும், முன் இணைப்பாக 0 அல்லது 91 என்ற இலக்கங்களை இல்லாமல் பேச முடியும். இந்த திட்டத்தை ஒரு சில தனியார் செல்போன் நிறுவனங்கள் சோதனை முயற்சியாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக வோடபோன், ஏர்டெல் மற்றும் எம்.டி.எஸ். ஆகிய நிறுவனங்கள் இதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது, எஸ்.டி.டி. மற்றும் உள்ளூர் அழைப்புகள் என பிரிக்கத் தேவையில்லை.
8 வாரங்கள் அவகாசம்
இந்திய செல்லுலார் அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜன் எஸ். மாத்யூஸ் கூறுகையில், தொலைபேசி மற்றும் செல்போன் வாயிலாக நாடு முழுவதும் பேசும் போது முன்இணைப்பாக 0 மற்றும் 91 எண்கள் இல்லாமல் பேசும் வசதியை முழுமையாக செயல்படுத்த இன்னும் 8 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் சோதனை முயற்சியாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. குறித்த காலக்கெடுவுக்குள் அமைச்சகத்தின் உத்தரவுப்படி இந்த வசதி செயல்படுத்தப்படும் என்றார்
No comments :