
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ‘துரந்தோ’ எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நேற்று காலை கொங்கன் ரெயில் பாதையில் தெற்கு கோவாவில் உள்ள பாலி ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீரென தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. ரெயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கொங்கன் ரெயில்வே தெரிவித்துள்ளது.
ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் கொங்கன் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
No comments :