
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது சிங்கள ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக, இலங்கை அரசு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஐ.நா செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மீள்குடியேற்றம் உட்பட்ட பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். எனினும் போரின் போது அங்கு நடந்த பாலியல் வன்முறை குற்றங்கள் குறித்து அரசு உரிய விசாரணை நடத்த தவறிவிட்டது என்று பான்கி மூன் குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதற்காக தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்து இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பான்கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
No comments :