
பிளாக்பெரி நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பாக ஒரே சிம் கார்டில் ஒன்பது எண்களை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதற்கான அனுமதியை பெற இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக பிளாக்பெரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்தவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சிம் கார்டு பயன்பாட்டுக்கு வெளிவரும் என இந்தியாவிற்கான பிளாக்பெரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் லால்வானி தெரிவித்தார்.
No comments :