
மதுரை,
நான் பணிபுரியும் ராணுவ அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பி நிம்மதியை கெடுத்ததால் 5 பேரையும் வெட்டிக்கொலை செய்தேன் என்று கைதான ராணுவ வீரர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தகராறு
மதுரை மாவட்டம் நாகையாபுரம் போலீஸ் சரகத்தை சேர்ந்த ஏ.தொட்டியபட்டியில் வசிக்கும் கமலக்கண்ணன் (வயது 35) டெல்லியில் ராணுவவீரராக பணி புரிந்தார். இவருக்கும் கோமதிக்கும் (28) 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கோமதி கணவருடன் சேர்ந்து வாழாமல், மங்கள்ரேவு கிராமத்தில் தந்தை சின்னச்சாமியுடன் (முன்னாள் ராணுவவீரர்) வசித்து வந்தார். சேர்ந்து வாழ வருமாறு கமலக்கண்ணன் பலமுறை அழைத்தும் கோமதி மறுத்து விட்டார்.
இந்த நிலையில், ஏ.தொட்டியபட்டியில் கோமதியின் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கமலக்கண்ணனும் கோமதி மற்றும் அவரது தந்தை சின்னச்சாமி, தாயார் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
5 பேர் வெட்டிக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணனும் அவரது தம்பி பரமசுந்தரமும் (28) சேர்ந்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கோமதி, சின்னச்சாமி, ராமுத்தாய், பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகிய 5 பேரை கொலை செய்தனர். இதுதொடர்பாக சின்னச்சாமியின் அண்ணன் மகன் லோகநாதன் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்படி போலீசார், கமலக்கண்ணன், பரமசுந்தரம், தாயார் சுப்புலட்சுமி, சகோதரி பூரணகலா, அவரது கணவர் வெங்கடேசன், ஆகியோர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெங்கடேசன் தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வாக்குமூலம்
மனைவி குடும்பத்தார் 5 பேரை வெட்டிக்கொன்றது ஏன் என்பது குறித்து கமலக்கண்ணன் வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வரு மாறு:-
கடந்த 2001-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்த நான், தற்போது டெல்லியில் பணியாற்றினேன். எனக்கும் கோமதிக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது முதலே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து சென்ற கோமதி அவரது தந்தை வீட்டில் வசித்தார். குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் கோமதி மறுத்து விட்டார்.
திருமங்கலம் குடும்பநல கோர்ட்டு மூலம் எனக்கு விவாகரத்து கிடைத்தது. இதை எதிர்த்து கோமதி, மதுரை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். திருமங்கலம் கோர்ட்டு உத்தரவின்படி கோமதிக்கு மாதந்தோறும் ரூ.6,100 ஜீவனாம்சம் கொடுத் தேன். மதுரை கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது என்னுடன் சேர்ந்து வாழ சம்மதித்த கோமதி, பின்னர் சேர்ந்து வாழ மறுத்தார்.
புகார் மனுக்கள்...
மேலும் சின்னச்சாமி உதவியுடன் கோமதி, நான் பணிபுரியும் அலுவலகத்துக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் புகார் மனுக்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார். ராணுவ அலுவலக விசாரணைக்காக நான் அடிக்கடி ஆஜரானேன். பணிபுரிந்த நாட்களைவிட விசாரணைக்கு ஆஜரான நாட்களே அதிகம். சேர்ந்து குடும்பம் நடத்த மறுத்த கோமதி, என்னை நிம்மதியாக வேலைபார்க்கவும் விடவில்லை. இதனால் அதிகமாக விரக்தி அடைந்தேன்.
கடந்த 19-ந்தேதி விடுப்பில் வந்த நான், கோமதியுடன் சேர்ந்து வாழவேண்டும் அல்லது அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தேன். இதற்காக கள்ளத்துப்பாக்கி மற்றும் அரிவாளை வாங்கினேன்.
ஏளனச்சிரிப்பு
சம்பவத்தன்று ஏ.தொட்டியபட்டியில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமதியும் அவரது குடும்பத்தினரும் என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர். இதை பொறுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். அதன்பிறகு கோமதியிடம் என் அக்காள் பூரணகலா, ‘என் தம்பியின் வாழ்க் கையை கெடுத்து விட்டாயே’ என்று கேட்டதை தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதுபற்றி என்னிடம் பூரணகலா தெரிவித்ததும் ஆத்திரம் தலைக்கேறிய நான், அரிவாள் மற்றும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோமதியை தேடினேன். பஸ் நிறுத்தத்தில் நின்ற அவளிடம், எனது அக்காளுடன் தகராறு செய்தது ஏன் என்று கேட்டேன். பதிலுக்கு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.
மனைவி மட்டுமே குறி
அப்போது கோமதியின் சகோதரிகள் மற்றும் தாய், தந்தை என்னை அடித்து தாக்கினர். ஆத்திரம் அடைந்த நான் துப்பாக்கியால் சுட்டேன். இதில் குண்டு யார் மீதும் படவில்லை. தொடர்ந்து அரிவாளால் கோமதியை மட்டும் குறிவைத்து வெட்ட முயன்றேன்.
இதைப்பார்த்த ஒருவர் தடுத்து என்னை தாக்க முயன்றார். இதனால் அங்கு நின்ற அனைவரையும் சரமாரியாக வெட்டினேன். இதில் கோமதி, அவரது தாயார் மற்றும் சகோதரிகள் ஆகிய 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தப்பி ஓடிய மாமனார் சின்னச்சாமியை அருகில் உள்ள கோவில் அருகே மடக்கிப்பிடித்து கழுத்தை அறுத்துக் கொன் றேன்
நான் பணிபுரியும் ராணுவ அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பி நிம்மதியை கெடுத்ததால் 5 பேரையும் வெட்டிக்கொலை செய்தேன் என்று கைதான ராணுவ வீரர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தகராறு
மதுரை மாவட்டம் நாகையாபுரம் போலீஸ் சரகத்தை சேர்ந்த ஏ.தொட்டியபட்டியில் வசிக்கும் கமலக்கண்ணன் (வயது 35) டெல்லியில் ராணுவவீரராக பணி புரிந்தார். இவருக்கும் கோமதிக்கும் (28) 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கோமதி கணவருடன் சேர்ந்து வாழாமல், மங்கள்ரேவு கிராமத்தில் தந்தை சின்னச்சாமியுடன் (முன்னாள் ராணுவவீரர்) வசித்து வந்தார். சேர்ந்து வாழ வருமாறு கமலக்கண்ணன் பலமுறை அழைத்தும் கோமதி மறுத்து விட்டார்.
இந்த நிலையில், ஏ.தொட்டியபட்டியில் கோமதியின் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கமலக்கண்ணனும் கோமதி மற்றும் அவரது தந்தை சின்னச்சாமி, தாயார் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
5 பேர் வெட்டிக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணனும் அவரது தம்பி பரமசுந்தரமும் (28) சேர்ந்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கோமதி, சின்னச்சாமி, ராமுத்தாய், பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகிய 5 பேரை கொலை செய்தனர். இதுதொடர்பாக சின்னச்சாமியின் அண்ணன் மகன் லோகநாதன் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்படி போலீசார், கமலக்கண்ணன், பரமசுந்தரம், தாயார் சுப்புலட்சுமி, சகோதரி பூரணகலா, அவரது கணவர் வெங்கடேசன், ஆகியோர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெங்கடேசன் தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வாக்குமூலம்
மனைவி குடும்பத்தார் 5 பேரை வெட்டிக்கொன்றது ஏன் என்பது குறித்து கமலக்கண்ணன் வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வரு மாறு:-
கடந்த 2001-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்த நான், தற்போது டெல்லியில் பணியாற்றினேன். எனக்கும் கோமதிக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது முதலே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து சென்ற கோமதி அவரது தந்தை வீட்டில் வசித்தார். குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் கோமதி மறுத்து விட்டார்.
திருமங்கலம் குடும்பநல கோர்ட்டு மூலம் எனக்கு விவாகரத்து கிடைத்தது. இதை எதிர்த்து கோமதி, மதுரை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். திருமங்கலம் கோர்ட்டு உத்தரவின்படி கோமதிக்கு மாதந்தோறும் ரூ.6,100 ஜீவனாம்சம் கொடுத் தேன். மதுரை கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது என்னுடன் சேர்ந்து வாழ சம்மதித்த கோமதி, பின்னர் சேர்ந்து வாழ மறுத்தார்.
புகார் மனுக்கள்...
மேலும் சின்னச்சாமி உதவியுடன் கோமதி, நான் பணிபுரியும் அலுவலகத்துக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் புகார் மனுக்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார். ராணுவ அலுவலக விசாரணைக்காக நான் அடிக்கடி ஆஜரானேன். பணிபுரிந்த நாட்களைவிட விசாரணைக்கு ஆஜரான நாட்களே அதிகம். சேர்ந்து குடும்பம் நடத்த மறுத்த கோமதி, என்னை நிம்மதியாக வேலைபார்க்கவும் விடவில்லை. இதனால் அதிகமாக விரக்தி அடைந்தேன்.
கடந்த 19-ந்தேதி விடுப்பில் வந்த நான், கோமதியுடன் சேர்ந்து வாழவேண்டும் அல்லது அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தேன். இதற்காக கள்ளத்துப்பாக்கி மற்றும் அரிவாளை வாங்கினேன்.
ஏளனச்சிரிப்பு
சம்பவத்தன்று ஏ.தொட்டியபட்டியில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமதியும் அவரது குடும்பத்தினரும் என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர். இதை பொறுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். அதன்பிறகு கோமதியிடம் என் அக்காள் பூரணகலா, ‘என் தம்பியின் வாழ்க் கையை கெடுத்து விட்டாயே’ என்று கேட்டதை தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதுபற்றி என்னிடம் பூரணகலா தெரிவித்ததும் ஆத்திரம் தலைக்கேறிய நான், அரிவாள் மற்றும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோமதியை தேடினேன். பஸ் நிறுத்தத்தில் நின்ற அவளிடம், எனது அக்காளுடன் தகராறு செய்தது ஏன் என்று கேட்டேன். பதிலுக்கு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.
மனைவி மட்டுமே குறி
அப்போது கோமதியின் சகோதரிகள் மற்றும் தாய், தந்தை என்னை அடித்து தாக்கினர். ஆத்திரம் அடைந்த நான் துப்பாக்கியால் சுட்டேன். இதில் குண்டு யார் மீதும் படவில்லை. தொடர்ந்து அரிவாளால் கோமதியை மட்டும் குறிவைத்து வெட்ட முயன்றேன்.
இதைப்பார்த்த ஒருவர் தடுத்து என்னை தாக்க முயன்றார். இதனால் அங்கு நின்ற அனைவரையும் சரமாரியாக வெட்டினேன். இதில் கோமதி, அவரது தாயார் மற்றும் சகோதரிகள் ஆகிய 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தப்பி ஓடிய மாமனார் சின்னச்சாமியை அருகில் உள்ள கோவில் அருகே மடக்கிப்பிடித்து கழுத்தை அறுத்துக் கொன் றேன்
No comments :