
புதுடெல்லி,
குடியரசு தின அணிவகுப்புகளை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிமுக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து பார்வையிட்டார். அதேவேளையில், மழையில் நனையாதவாறு தடுக்கும் வகையில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
குடியரசு தின விழாவின் போது டெல்லியில் மழை லேசாக தூறல் விட்டது. இதனால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர் மோடி மற்றும் விவிஐபி மாடத்தில் அமர்ந்திருந்த பிறமுக்கிய நபர்களுக்கும் குடைகளையே பிடித்து மழையில் நனையாதவாறு அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு உதவியாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் பார்த்துக்கொண்டனர்.
ஒபாமா தனது பீஸ்ட் வாகனத்தில் வந்து இறங்கியவுடன் மழையில் இருந்து பாதுகாக்கும் அங்கியை அவரது உதவியாளர் ஒபாமாவுக்கு அணிவித்தார். பின்னர் குடை உதவியுடன் ஒபாமா விவிஐபி மாடத்திற்கு சென்றார். தனது இருக்கையில் அமர்ந்த பிறகு பாதுகாப்பு அதிகாரிகளும் தனிப்பட்ட உதவியாளர்களும் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரதமர் மோடி உள்ளிட்டோரை மழையில் நனைந்துவிடாத படி குடைகளை பிடித்து கொண்டு நின்றனர். இதற்கிடையே, மிச்செல் ஒபாமா சில நேரங்களில் குடைகளை அவரே பிடித்துகொண்டு இருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரோமங்களால் ஆன தொப்பி அணிந்த படி சிறப்பு மாடத்தில் அமர்ந்து இருந்தார்.
மழைபெய்யும் வாய்ப்பு இருந்தும் விவிஐபிகளுக்கு போதுமான முன்னேற்பாடுகளை ஏற்படுத்த தவறிவிட்டது என்று குடியரசு தின விழா அணிவகுப்புகளை ஏற்பாடுகளை செய்திருந்த பாதுகாப்பு அமைச்சகம் மீது குற்றம் சாட்டப்பட்டது. விமானப்படையின் சாகசங்களை இடையூறின்றி பார்ப்பதற்காக விவிஐபி கள் இருக்கும் மாடத்தில் மேற்கூரை அமைக்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் இதுபற்றி விளக்கம் அளித்தனர்.
ஏற்கனவே மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களை குடைகளை கொண்டு செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக வேறு வழியின்றி மழையில் நனைந்தவாறே 1.25 லட்சம் பொதுமக்கள் குடியரசு தின அணிவகுப்புகளை பார்வையிட்டனர்.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்க அதிபர், விழா அணிவகுப்பில் இடம் பெற்ற ராணுவ வீரர்களின் வீர, தீர சாகசம் மற்றும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்த்து ரசித்தார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம், ஆகியவற்றையும் ரசித்து பார்த்த ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடியிடம் அதுபற்றி விளக்கமாக கேட்டறிந்தார்.
நாட்டின் 66-வது குடியரசு தின விழா டில்லி ராஜ்பாத் சாலையில் நடந்தது. இதில் முதன்முறையாக முப்படையான ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றில் பெண் படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொண்டது.
குடியரசு தின அணிவகுப்புகளை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிமுக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து பார்வையிட்டார். அதேவேளையில், மழையில் நனையாதவாறு தடுக்கும் வகையில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
குடியரசு தின விழாவின் போது டெல்லியில் மழை லேசாக தூறல் விட்டது. இதனால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர் மோடி மற்றும் விவிஐபி மாடத்தில் அமர்ந்திருந்த பிறமுக்கிய நபர்களுக்கும் குடைகளையே பிடித்து மழையில் நனையாதவாறு அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு உதவியாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் பார்த்துக்கொண்டனர்.
ஒபாமா தனது பீஸ்ட் வாகனத்தில் வந்து இறங்கியவுடன் மழையில் இருந்து பாதுகாக்கும் அங்கியை அவரது உதவியாளர் ஒபாமாவுக்கு அணிவித்தார். பின்னர் குடை உதவியுடன் ஒபாமா விவிஐபி மாடத்திற்கு சென்றார். தனது இருக்கையில் அமர்ந்த பிறகு பாதுகாப்பு அதிகாரிகளும் தனிப்பட்ட உதவியாளர்களும் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரதமர் மோடி உள்ளிட்டோரை மழையில் நனைந்துவிடாத படி குடைகளை பிடித்து கொண்டு நின்றனர். இதற்கிடையே, மிச்செல் ஒபாமா சில நேரங்களில் குடைகளை அவரே பிடித்துகொண்டு இருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரோமங்களால் ஆன தொப்பி அணிந்த படி சிறப்பு மாடத்தில் அமர்ந்து இருந்தார்.
மழைபெய்யும் வாய்ப்பு இருந்தும் விவிஐபிகளுக்கு போதுமான முன்னேற்பாடுகளை ஏற்படுத்த தவறிவிட்டது என்று குடியரசு தின விழா அணிவகுப்புகளை ஏற்பாடுகளை செய்திருந்த பாதுகாப்பு அமைச்சகம் மீது குற்றம் சாட்டப்பட்டது. விமானப்படையின் சாகசங்களை இடையூறின்றி பார்ப்பதற்காக விவிஐபி கள் இருக்கும் மாடத்தில் மேற்கூரை அமைக்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் இதுபற்றி விளக்கம் அளித்தனர்.
ஏற்கனவே மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களை குடைகளை கொண்டு செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக வேறு வழியின்றி மழையில் நனைந்தவாறே 1.25 லட்சம் பொதுமக்கள் குடியரசு தின அணிவகுப்புகளை பார்வையிட்டனர்.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்க அதிபர், விழா அணிவகுப்பில் இடம் பெற்ற ராணுவ வீரர்களின் வீர, தீர சாகசம் மற்றும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்த்து ரசித்தார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம், ஆகியவற்றையும் ரசித்து பார்த்த ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடியிடம் அதுபற்றி விளக்கமாக கேட்டறிந்தார்.
நாட்டின் 66-வது குடியரசு தின விழா டில்லி ராஜ்பாத் சாலையில் நடந்தது. இதில் முதன்முறையாக முப்படையான ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றில் பெண் படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொண்டது.
No comments :