குடியரசு தின விழா :தனது பீஸ்ட் வாகனத்திலேயே வந்தார் ஒபாமா

புதுடெல்லி,

குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாதைக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபமா தனது பீஸ்ட் வாகனத்திலேயே வருகை தந்தார்.

இந்தியாவின் 66-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோரும், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் பிற அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விருந்தினர்கள் வழக்கமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஒரே காரில் வருவதுதான் வழக்கம். ஆனால், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களை கொண்ட பீஸ்ட் காரை தவிர்த்து, பிரணாப் முகர்ஜியுடன் ஒபாமா ஒரே  காரில் வருவதற்கு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.

இதனால் மரபுகளை மீறி அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பீஸ்ட் காரிலேயே ராஜபாதைக்கு வருகை தந்தார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்செல் ஒபாமா வருகை தந்தார். அவர்களை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் அவரது மனைவி சல்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கார் வரவேற்றனர்.  இதைதொடர்ந்து சிறிது நேரத்தில் வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய ஜனாதிபதி கருப்பு நிற பென்ஸ் S600 (W221)  என்ற காரில் வருகை புரிகின்றனர். ராணுவ துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிகுண்டு போன்றவைகளால் பாதிப்படையாத வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top