
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூரில் கேட்டை திறக்க காலதாமதம் செய்த காவலாளி மீது ஹம்மர் காரை ஏற்றிய தொழில்அதிபர் முகமது நிஜாம் கைது செய்யப்பட்டார்.
திருச்சூரில் சோபா குரூப்ஸ் குடியிருப்பு காவலாளி சந்திரபோஸ் மீது சர்ச்சைக்குரிய பீடி தொழில்அதிபர் முகமது நிஜாம் ஹம்மர் காரை ஏற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சந்திரபோஸ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்அதிபர் முகமது நிஜாம் திருநெல்வேலியை தலைமையமாக கொண்ட பீடி கம்பெனியின் இயக்குநர் ஆவார். தவிர முக்கிய புகையிலை விற்பனை வழங்குநராகவும் இருந்து வருகிறார். மத்திய கிழக்கில் ஓட்டல்கள் மற்றும் தங்கநகை கடைகளை வைத்துள்ளார். அவர் விதவிதமான விலைஉயர்ந்த கார்களை கொண்டுள்ளார். கேட்டை திறக்க காலதாமதம் செய்த காவலாளியை முகமது நிஜாம் முன்னதாக கொடூமையாக சித்திரவதை செய்துள்ளார். இதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த காவலாளியை நிசாம் ஹம்மர் காரை கொண்டு ஏற்றி, சுவருடன் மோத செய்துள்ளார். தொடர்ந்து காவலாளியை கம்பியை கொண்டும் காவலாளி சந்திரபோஸை கொடூரமாக தாக்கியுள்ளார்.
உடனடியாக வந்த மற்ற காவலாளிகள் சந்திரபோஸை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தொழில்அதிபருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சூரில் தொழில்அதிபர் முகமது நிசாம் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது. கேரள சமூகவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு விதிகளின்படி வழக்குகளை பதிவுசெய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஜாம் முன்னதாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். கடந்த 2013ஆம் ஆண்டு தனது 9 வயது மகனை ஃபெராரி காரை ஓட்ட செய்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். இதனை அவரது மனைவி அமால் நிஷா வீடியோ எடுத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறார் நீதிசட்டத்தின்படி குழந்தைகளை வதைசெய்யும் குற்றம், மற்றும் லைசன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்ட செய்ய அனுமதி அளித்தல் ஆகிய குற்றங்களில் நிஜாம் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தவர்.
கேரள மாநிலம் திருச்சூரில் கேட்டை திறக்க காலதாமதம் செய்த காவலாளி மீது ஹம்மர் காரை ஏற்றிய தொழில்அதிபர் முகமது நிஜாம் கைது செய்யப்பட்டார்.
திருச்சூரில் சோபா குரூப்ஸ் குடியிருப்பு காவலாளி சந்திரபோஸ் மீது சர்ச்சைக்குரிய பீடி தொழில்அதிபர் முகமது நிஜாம் ஹம்மர் காரை ஏற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சந்திரபோஸ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்அதிபர் முகமது நிஜாம் திருநெல்வேலியை தலைமையமாக கொண்ட பீடி கம்பெனியின் இயக்குநர் ஆவார். தவிர முக்கிய புகையிலை விற்பனை வழங்குநராகவும் இருந்து வருகிறார். மத்திய கிழக்கில் ஓட்டல்கள் மற்றும் தங்கநகை கடைகளை வைத்துள்ளார். அவர் விதவிதமான விலைஉயர்ந்த கார்களை கொண்டுள்ளார். கேட்டை திறக்க காலதாமதம் செய்த காவலாளியை முகமது நிஜாம் முன்னதாக கொடூமையாக சித்திரவதை செய்துள்ளார். இதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த காவலாளியை நிசாம் ஹம்மர் காரை கொண்டு ஏற்றி, சுவருடன் மோத செய்துள்ளார். தொடர்ந்து காவலாளியை கம்பியை கொண்டும் காவலாளி சந்திரபோஸை கொடூரமாக தாக்கியுள்ளார்.
உடனடியாக வந்த மற்ற காவலாளிகள் சந்திரபோஸை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தொழில்அதிபருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சூரில் தொழில்அதிபர் முகமது நிசாம் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது. கேரள சமூகவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு விதிகளின்படி வழக்குகளை பதிவுசெய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஜாம் முன்னதாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். கடந்த 2013ஆம் ஆண்டு தனது 9 வயது மகனை ஃபெராரி காரை ஓட்ட செய்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். இதனை அவரது மனைவி அமால் நிஷா வீடியோ எடுத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறார் நீதிசட்டத்தின்படி குழந்தைகளை வதைசெய்யும் குற்றம், மற்றும் லைசன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்ட செய்ய அனுமதி அளித்தல் ஆகிய குற்றங்களில் நிஜாம் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தவர்.
No comments :