
புதுடெல்லி,
சற்று முன்வரை ஆம் ஆத்மி கட்சி- 29 தொகுதிகளிலும் பாஜக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதி அக்கட்சி வேட்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் 31,528 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர் நுபுர் சர்மாவை வீழ்த்தி உள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரண் வாலியாவுக்கு 3 ஆம் இடம் கிடைத்துள்ளது.
கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் கிரண் பேடி 2277 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.கே பாக்காவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அக்கட்சி 67 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா 3 தொகுதிகளிலும் இதர கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
சற்று முன்வரை ஆம் ஆத்மி கட்சி- 29 தொகுதிகளிலும் பாஜக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதி அக்கட்சி வேட்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் 31,528 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர் நுபுர் சர்மாவை வீழ்த்தி உள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரண் வாலியாவுக்கு 3 ஆம் இடம் கிடைத்துள்ளது.
கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் கிரண் பேடி 2277 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.கே பாக்காவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
No comments :