
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், எந்தஒரு கட்சியும் பிடிக்க முடியாத வண்ணம் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் 12 தொகுதி வரையில் முன்னிலை பெற்று இருந்த பாரதீயஜனதா பெருத்த பின்னடவை சந்தித்துள்ளது. பாரதீய ஜனதாவின் முன்னிலை நிலவரம் வெறும் 7 ஆகவே உள்ளது. காங்கிரஸ் கட்சி பட்டியலிலே இல்லாமல் உள்ளது. அக்கட்சி எந்தஒரு தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்துதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேசினேன், வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். டெல்லி வளர்ச்சிக்கு மத்திய அரழு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று உறுதி அளித்தேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments :