
புதுடெல்லி,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை இ.எஸ்.பி.என்–ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்திய அணி மோதும் ஆட்டங்களை தூர்தர்ஷனுடன், உரிமம் பெற்ற நிறுவனம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.எஸ்.பி.என்–ஸ்டார் நிறுவனம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தூர்தர்ஷனுக்கு ஒளிபரப்பை பகிர்ந்து அளிக்கும் விதிமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 17–ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை இ.எஸ்.பி.என்–ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்திய அணி மோதும் ஆட்டங்களை தூர்தர்ஷனுடன், உரிமம் பெற்ற நிறுவனம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.எஸ்.பி.என்–ஸ்டார் நிறுவனம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தூர்தர்ஷனுக்கு ஒளிபரப்பை பகிர்ந்து அளிக்கும் விதிமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 17–ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
No comments :