
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சொத்துத்தகராறில் அவர் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
தஞ்சை அருளானந்தநகரை சேர்ந்தவர் சேகர் (வயது55). நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். இவரது மனைவி கீதா. இவர் தற்போது நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து தலைவராக உள்ளார். சேகரின் அண்ணன் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். தம்பி பத்மநாபன். இவரது மகன் கார்த்திக்குக்கு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நேற்று காலை திருமணவிழாவில் சமையல் செய்வதற்காக ஆட்களை சேகர் திருமணமண்டபத்திற்கு காரில் அழைத்து வந்தார். அதன்பின்னர் அவர் மீண்டும் காரில் ஏறுவதற்காக நடந்து வந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது திருமணமண்டபத்தின் வளாகத்தில் மறைந்து இருந்த 2 மர்ம ஆசாமிகள் சேகரை நோக்கி அரிவாள்களுடன் ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் சேகர் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். ஆனால் மர்ம ஆசாமிகள் அவரை விரட்டிச்சென்று வெட்டினர். அப்போது எதிரே வந்த மேலும் 2 மர்ம ஆசாமிகள் அவர்களுடன் சேர்ந்து அவரை வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டனர்.
சொத்துப்பிரச்சினை
இந்த கொலை தொடர்பாக சேகரின் தம்பி பத்மநாபன் தஞ்சை நகர தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் சேகருக்கும், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே சொத்துப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்தது. இந்த முன்விரோதத்தில் ராதாகிருஷ்ணனின் மருமகன் பாலசுப்பிரமணியன், கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கலாம் என கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
தஞ்சை அருளானந்தநகரை சேர்ந்தவர் சேகர் (வயது55). நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். இவரது மனைவி கீதா. இவர் தற்போது நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து தலைவராக உள்ளார். சேகரின் அண்ணன் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். தம்பி பத்மநாபன். இவரது மகன் கார்த்திக்குக்கு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நேற்று காலை திருமணவிழாவில் சமையல் செய்வதற்காக ஆட்களை சேகர் திருமணமண்டபத்திற்கு காரில் அழைத்து வந்தார். அதன்பின்னர் அவர் மீண்டும் காரில் ஏறுவதற்காக நடந்து வந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது திருமணமண்டபத்தின் வளாகத்தில் மறைந்து இருந்த 2 மர்ம ஆசாமிகள் சேகரை நோக்கி அரிவாள்களுடன் ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் சேகர் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். ஆனால் மர்ம ஆசாமிகள் அவரை விரட்டிச்சென்று வெட்டினர். அப்போது எதிரே வந்த மேலும் 2 மர்ம ஆசாமிகள் அவர்களுடன் சேர்ந்து அவரை வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டனர்.
சொத்துப்பிரச்சினை
இந்த கொலை தொடர்பாக சேகரின் தம்பி பத்மநாபன் தஞ்சை நகர தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் சேகருக்கும், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே சொத்துப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்தது. இந்த முன்விரோதத்தில் ராதாகிருஷ்ணனின் மருமகன் பாலசுப்பிரமணியன், கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கலாம் என கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments :