
இந்த போட்டியில் கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் 7 பேர் அடங்கிய இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்திய அணி செல்கிறது. இந்திய அணியில் அனிகிட் குப்தா, பாஸ்கர் சென், தீபிகா திமான் (மூவரும் டெல்லி), குந்தகி செல்வகுமார் (கோவை), பரத் ஷர்மா (அணியின் தலைவர்), அம்பேத்கர் குப்தா (பயிற்சியாளர் மற்றும் மானேஜர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியினர் தனிநபர் கட்டா மற்றும் குமிதே பிரிவு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தை சேர்ந்த குந்தவி செந்தில்குமாருக்கு பயணச் செலவான ரூ.1 லட்சத்தை இந்திய கராத்தே சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
No comments :