மும்பை வந்து இறங்கிய விமானத்தின் அவசர வழி கதவை திறந்து வாலிபர் ஒருவர் கீழே குதித்ததால்
பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சண்டிகாரில் இருந்து வந்த ஜெட் விமானம் ஒன்று தரை இறங்கியது. முனைமம் 1 பி பகுதியில் நின்ற விமானத்தில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். அப்போது பயணிகளில் ஒருவர் விமானத்தில் இருந்த அவசர வழி கதவை திறந்து 15 அடி உயரத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பகுதியில் கீழே குதித்தார்.
பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை வந்த விமானம்

பின்னர் அந்த வாலிபர் எந்த பதற்றமும் இன்றி விமான நிலையத்தில் இருந்து வெளியேற நடந்து சென்று கொண்டு இருந்தார். இதனை கண்ட சில விமான பயணிகள் உடனே ஜெட் விமான ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக பாதுகாப்பு படை வீரர்களிடம் தெரியப்படுத்தினர்.
வாலிபர் பிடிபட்டார்
உடனே விரைந்து வந்த பாதுகாப்பு படை வீரர்கள், அந்த வாலிபரை பிடித்து விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் ஆகாஷ் ஜெயின் (வயது30) என்பது தெரியவந்தது.
இது குறித்து விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் மதுக்கர் சாங்கே கூறுகையில், ‘‘விமானத்தில் இருந்து குதித்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக அரை மணி நேரத்துக்கு பிறகே சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
No comments :