தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர் சென்னை...

கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவருக்கு சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


போலீஸ்காரர்

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 24). இவர் புதுவை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாகூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அடுத்துள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

தன்னைத்தானேசுட்டுக்கொண்டார்

நேற்று அதிகாலை 6 மணிக்கு கருவூலத்தில் உள்ள குளியல் அறைக்கு பாலமுரளி சென்றார். அங்கு அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை தனது கழுத்தில் வைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு தாடை வழியாக வெளியே வந்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலமுரளி மயங்கி கீழே விழுந்தார்.

இதற்கிடையே காலை 7 மணிக்கு பாலமுரளியை பணி மாற்றுவதற்காக மாதேஷ் என்ற போலீஸ்காரர் அங்கு வந்தார். அப்போது அங்கு பாலமுரளி இல்லாததால் பல இடங்களில் தேடி பார்த்தார். பின்னர் குளியல் அறைக்கு சென்றார். அப்போது குளியல் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. மேலும் அந்த கதவின் வழியாக ரத்தம் வந்து கொண்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஷ் குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கே பாலமுரளி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு பாலமுரளியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் போலீஸ்காரர் பாலமுரளி மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top