
சென்னை பள்ளிக்கரணையில் அரசுக்கு சொந்தமான ரூ.1200 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிக்கப்பட்டு விட்டது, என்று தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பாலாஜி(வயது 46), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் (35) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். தலைமறைவாக இருந்த சென்னை செனாய்நகரைச் சேர்ந்த முருகையாபாண்டியன் (56), திருவாரூர் மாவட்டம், வலங்கைமானைச் சேர்ந்த கலீலூல் ரகுமான் (45) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ரூ.1,200 கோடி நிலத்தை அபகரிக்க, போலி ஆவணம் தயாரித்து கொடுத்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
No comments :