
மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளது.
இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கில் அனைத்து சாட்சியங்களின் விசாரணையும் முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தனிக்கோர்ட்டு நீதிபதி ஷைனி இந்த வழக்கில் ஏப்ரல் 15-ந்தேதி இறுதிவாதம் தொடங்கும் என்று அறிவித்து இருந்தார்.
No comments :