
இதைப்போல பாகிஸ்தானில் நடந்த திருமண விழா ஒன்றில், பட்டாசு வெடித்ததால் 2 மணமகன்களுக்கு மிகப்பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள கராச்சி நகரை சேர்ந்த 2 சகோதரர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடந்தது. இந்த விழாவை அவர்களது உறவினர்களும், நண்பர்களும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஆனால் சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடித்து, அக்கம் பக்கத்தினருக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியதாக இந்த 2 மணமகன்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாத எதிர்ப்பு சட்டப்படி, ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள இந்த 2 பேருக்கும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. பாகிஸ்தானில் அமலில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களும், தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றங்களும் அப்பாவி மக்களை தண்டிக்கின்றன என மனித உரிமை ஆர்வலர்கள் அடிக்கடி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments :