செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தெலுங்குப் பட நடிகை நீத்து அகர்வால் என்பவரை தேடி பொலிசார் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் 20 தமிழர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மஸ்தான் வாலி என்பவர் கைதாகியுள்ளார். அதேபோல சென்னையைச் சேர்ந்த நடிகர் சி. சரவணன் என்பவர் கைதாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மஸ்தான் வாலி என்பவர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். செம்மரக் கடத்தலில் பல கோடிகளைப் பார்த்த இவர், அதில் கிடைத்த பணத்தை வைத்து தயாரிப்பாளராக மாறியுள்ளார்.தனக்கு செம்மரக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து நடிகை நீத்துவுக்கு நகைகளையும், ஹைதராபாத்தில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்துள்ளார். இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக 13 வழக்குகள் உள்ள நிலையில், தற்போது பொலிஸார் ருத்ரவரம் என்ற இடத்தில் வைத்து வாலியை கைது செய்துள்ளனர். பின்னர் வாலி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நீத்து அகர்வால் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து நீத்து மீது தற்போது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரது வங்கிக் கணக்கை முடக்கிய பொலிசார் தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி இரு படைகளை பெங்களூருக்கும், மும்பைக்கும் அனுப்பியுள்ளனர்.
No comments :