- பனிப்பாறைகளால் முற்றிலும் சூழப்பட்ட பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்ட்டிகாவில் ரத்த அருவி ஒன்று பல்லாண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1911ம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Griffith Taylor என்ற புவியியலாளர் பூமியின் தென் பகுதியில் அமைந்துள்ள அண்டார்ட்டிகாவில் ஒரு வினோத நிகழ்வினை கண்டு ஆச்அங்கு ஒரு குறிப்பிட்ட பனிப்பாறையில் இருந்து ரத்த சிவப்பு நிறத்தில் நீர் அருவியாக வெளியேறி கொண்டிருந்தது. தற்போது Taylor பனிப்பாறை என்றழைக்கப்படும் அந்த மிக உயர்ந்த பனிபாறையில் இருந்து ரத்தம் போன்ற நீர் பல ஆண்டுகளாக அருவியாக ஓடியதால் பலரும் அதன் மர்மத்தை அறிய முயன்றனர்.
- பனிபாறைகளால் முழுதும் நிரம்பிய அண்டார்ட்டிகா கண்டத்தில், குறிப்பிட்ட ஒரு பனிப்பாறையில் இருந்து மட்டும் இவ்வாறு ரத்த நிறத்தில் நீர் அருவியாக பாய்வதை அறிந்த மக்கள் அச்சமும் ஆச்சர்யமும் அடைந்துள்ளனர். இதையடுத்து புவியியலாளர்கள் பலரும் இந்த ரத்த நிறம் பற்றிய மர்மத்தினை அறிந்து கொள்ள அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அங்கு ஆராய்ச்சியை தொடங்கிய அவர்கள், முதலில் பாசிகள் தான் இந்த நிறமாற்றத்திற்கு காரணம் என்று கருதியுள்ளனர். ஆனால் பல்லாண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளின் முடிவாகவே அதன் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது அந்த பனிப்பாறையின் அடியில் சுமார் 2 மில்லியன் ஆண்டுகளாக ஒரு ஓடை ஓடிகொண்டிருப்பதாகவும் அங்கு வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளில் இருந்து வெளிவந்த சல்ஃபர் மற்றும் இரும்பு ஆகியவற்றால் அந்த சிவப்பு நிறம் தோன்றியது அம்பலமாகியுள்ளது. மேலும், அந்த ஓடையின் நீரில் ஆக்ஸிஜனின் அளவு வெகுவாக இல்லை என்றும், நுண்ணுயிரிகள் சல்ஃபேட்டை உணவாக கொண்டே சுவாசித்து வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஆக்ஸிஜன் இல்லாத அந்த நீரினில் உலகில் வேறு எந்த மூலையிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத 17 வகையான நுண்ணுயிரிகள் இருந்ததும் ஆராய்ச்சியாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிர் வாழ்வதற்கு ஆதாரமான ஆக்ஸிஜன் அதிகளவில் இல்லாத அந்த ஓடையில் எவ்வாறு இத்தனை அரிய வகை நுண்ணுயிரிகள் இருக்கிறது என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முற்றிலும் உறைந்த பனிப்பாறைக்கு அடியில் பல்லாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஓடையில் வெளிச்சம் எதுவும் இன்றி அந்த வினோத நுண்ணுயிரிகள் வாழ்ந்து வந்ததும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிகாவில் உள்ள எண்ணற்ற பனிப்பாறைகளில் ஏற்படாத இந்த வினோத சம்பவம் குறிப்பிட்ட Taylor பனிப்பாறையில் மட்டுமே நடப்பது ஏன் என்பதற்கான கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
No comments :