
புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக நாசாவால் அனுப்பபட்ட ஆளில்லா விண்கலம், தனது 11 ஆண்டு கால இலக்கை நிறைவு செய்து எரிபொருள் தீர்ந்து போன நிலையில் அந்த கிரகத்தின் மீது மோதி விழுந்து நொறுங்கியது.இந்திய, நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை இது புதனில் மோதியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மெசஞ்சர் என்ற பெயர் கொண்ட அந்த விண்கலம் புதன் கிரகத்தை ஆராய்வதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு நாசாவால் விண்ணில் ஏவப்பட்டது. 513 கிலோ எடையும், மூன்று மீட்டர் நீளமும் கொண்ட இந்த விண்கலம் பல ஆய்வுகளை மேற்கொண்டது.
இறுதியாக எரிபொருள் தீர்ந்த நிலையில் மணிக்கு 8,750 மைல்வேகத்தில் புதன் கிரகத்தின் மீது மோதி நொறுங்கியது. இது ஒலியின் வேகத்தை விட 12 மடங்கு அதிகமாகும். இது மோதிய வேகத்தில், புதன் கிரகத்தின் மீது டென்னிஸ் மைதானம் அளவுக்கு ஒரு பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த பள்ளத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
No comments :