
கொலம்பியாவில் ஆண்டிற்கு சுமார் 55 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. கால்தஸ் (Caldas) மாகாணத்தின் பொகோட(BOGOTA) பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் சிக்கிய சுமார் 17 சுரங்கத்
தொழிலாளர்களின் நிலை என்ன என்று இது வரை தெரியவில்லை. காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாயமான தொழிலாளர்களின் குடும்பத்தினர் மலைப்பகுதியில் இரவு முழுவதும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
No comments :