துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை அமெரிக்காவில்

அமெரிக்காவில் கண்காட்சி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.  


அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் நபிகள் நாயகம் குறித்த ஓவிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்காட்சி நடைபெற்றது. அப்போது, திடீரென கண்காட்சி நடந்த கட்டத்திற்குள் நுழைய முயன்ற அடையாளம் தெரியாத 2 நபர்கள் அங்கிருந்த பாதுகாவலரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினரும் பதிலுக்கு சுட்டனர். இந்த தாக்குதலில்  துப்பாக்கி சூடு நடத்திய 2 பேரும் உயிரிழந்தனர். பாதுகாவலாளி ஒருவர் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் காரும் சோதனையிடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உயிரிழந்த நபர்களுடன் வந்த மற்றொருவர் அந்த கட்டிடத்திற்கு அருகாமையிலேயே தங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top