பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 23 பேர் பலி காஷ்மீரில்



காஷ்மீர் மாநிலம் உதம்பூரை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் சம்ரோத்தி என்ற கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென பஸ்சின் பின் டயரில் தீப்பிடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களில் 25 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top