தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஜோலார்பேட்டை மங்கம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் சசிகலா (17). இவர், ஜெயமாதா நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி விட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என்ற பயத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில், மாணவி சசிகலா 579 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 103, ஆங்கிலம்- 89, விலங்கியல்- 88, தாவரவியல்- 80, வேதியியல்- 101, இயற்பியல்- 118.
தேர்வில் மாணவி தேர்ச்சியடைந்த நிலையில், தேர்வு முடிவுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஜோலார்பேட்டை மங்கம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் சசிகலா (17). இவர், ஜெயமாதா நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி விட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என்ற பயத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில், மாணவி சசிகலா 579 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 103, ஆங்கிலம்- 89, விலங்கியல்- 88, தாவரவியல்- 80, வேதியியல்- 101, இயற்பியல்- 118.
தேர்வில் மாணவி தேர்ச்சியடைந்த நிலையில், தேர்வு முடிவுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.








No comments :