
கேரளாவில் ஆழப்புழா மாவட்டத்தில் அரசு விளையாட்டு ஆணையத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்த தடகள வீராங்கனைகள் நான்கு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
அதில் பதினைந்து வயது வீராங்கனை மட்டும் மரணமடைந்தார். மற்ற மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவிகள் நான்கு பேரும் அரசுக்கு சொந்தமான விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். அங்கு சில சீனியர் வீராங்கனைகளால் உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்த பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவிகள் தற்கொலை செய்ய முடிவு செய்து அரளி விதையை சாப்பிட்டனர். அதனால் மயங்கி விழுந்த மாணவிகள் மாலை 7 மணியளவில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒரு மாணவி உயிரிழந்தார். மற்ற மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் விடுதியை முற்றுகையிட்டனர். ஆனால் விடுதி காப்பாளர் மாணவிகளை யாரும் துன்புறுத்தவில்லை என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து மாணவியின் உடலை வாங்க மறுத்தனர்.
இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொச்சி தலைமை ஆய்வாளர் எம் அஜித் குமாரிடம் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments :