
கோவை அருகே கருமத்தம்பட்டி கிராமத்தில் அவர்கள் பேக்கரி கடை ஒன்றில் நேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்த ஆந்திர மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று கோவை வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் 5 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ரூபேஷ், ஷைனி ஆகிய இருவரும் கணவன், மனைவி என தெரியவந்துள்ளது. இவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஈஸ்வரன், அனூப் ஆகிய இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும், கண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
No comments :