கோவிலின் இடது புறத்தில் விழா அரங்க மேடை உள்ளது. அதில் குடும்ப உறவுகளை குறிக்கும் வகையில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும், கிரானைட் கல்லால் ஆன சிவன் சிலை மற்றும் சாமி சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தாய் கோவிலை பார்வையிட தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
கோவிலின் முகப்பில், "இக்கோவில் ஒரு தாய்க்காக மட்டுமே கட்டப்பட்டது அல்ல, அகிலத்து அன்னையர் அனைவருக்கும் சமர்ப்பணம்" என்ற வாசகமும், எழுதப்பட்டுள்ளது.
No comments :