
பப்புவா நியுகினியாவின் கொக்கொப்பு நகருக்கு தெற்காக 13 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 50 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கடல் அலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரபோல் துறைமுகம் அருகே எழுந்த சுனாமி அலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா என்பது பற்றி இதுவரை தகவல் எதுவும் வரவில்லை. நிலநடுக்கத்தால் அங்கு மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
No comments :