
ஃப்ளோரிடா அருகே வசித்த 26 வயது Nickerson, தனது 25 வயது காதலி Cheryl ஐ ஒரு வீட்டில் கத்தி முனையில் சிறை வைத்தார். காதலியுடன் அவரகு மூன்று குழந்தைகளும் சிறை வைக்கப்பட்டனர். காதலியின் செல்போனைப் பிடுங்கிவைத்துக்கொண்ட Nickerson நீண்ட நேரத்துக்குப் பிறகு, பீஸா ஒன்றை ஆர்டர் செய்வதற்காக, Cheryl இன் செல்போனைத் திருப்பி வழங்கினார்.
ஒரு அப்ளிகேசன் வாயிலாக பீஸாவை ஆர்டர் செய்த Cheryl, தான் கத்தி முனையில் சிறைவைக்கப்பட்டிருந்த தகவலை ரகசியமாகத் தெரிவித்தார். இத்தகவல் போலீசாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காதலி மற்றும் அவரது மூன்று குழந்தைகளை மீட்டனர்.
No comments :