
சீனாவின் சிசிடிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றின் போது, இந்தியா வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர், அருணாசல பிரதேச மாநிலங்கள் குறிப்பிடப்படாமல் ஒளிபரப்பப்பட்டது. பிரதமர் மோடி, சீன பிரதமரின் சொந்த ஊரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த இந்த சம்பவம், இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா அரசு அருணாசல பிரதேசத்தையும், ஜம்மு காஷ்மீரின் சில இடங்களையும் உரிமை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எல்லை பிரச்னை குறித்து, இரு நாட்டு உயர் அதிகாரிகளிடையே 18 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், சுமூக தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி
நீடித்து வருகிறது.
No comments :