
சர்வதேச விண்வெளி ஆய்வகம் சென்ற ரஷிய விண்கலம் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த விண்கலம் நாளை பூமியை நோக்கி விழுவதாகவும் ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து உருவாக்கி வருகிறது. அங்கு தங்கி பணிபுரியும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர், உடை, எரிபொருள், ஆக்சிஜன், மற்றும் உபகரணங்களை ரஷியாவின் ‘‘திபுரோகிரஸ் எம்-27எம்’’ என்ற ஆளில்லா விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையான 28 ஆம் தேதியன்று, கஜகஸ்தானில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அது வழி மாறி சென்று விட்டது.
அதனால் தரைகட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பை அது இழந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலத்தின் உடைந்த பாகங்கள் நாளை, கிழக்கு அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் அல்லது இந்தோனேசியா கடலில் விழும் என ரஷிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே புரோகிரஸ் விண்கலம் செயல்பாடு இழந்தது குறித்து சிறப்பு கமிஷன் விசாரணைக்கு ரஷியா உத்தரவிட்டுள்ளது. தற்போது விண்கலம் எரிந்ததின் மூலம் 330 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments :