
ஜப்பான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கி தொடரில் விளையாடி வருகிறது. இதன் மூன்றாவது ஆட்டம் புவனேஷ்வரில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே இந்திய அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் பாதி முடிவில் இரு அணிகளின் கோல் முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர் VR ரகுநாத் மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தனர்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற போட்டி கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது
No comments :