தனது பாதுகாப்புத் தொடர்பான விபரங்களைத் தெரிவிக்க உத்தரவிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் பிரதமர் மோடியின் மனைவி மேல் முறையீடு செய்துள்ளார்.

பிரதமர் மோடி மனைவிக்கு 10 போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். தான் பேருந்தில் செல்லும்போது தனக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் காரில் வருகிறார்கள் என்று கூறி தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து மோடியின் மனைவி சந்தேகத்தை எழுப்பினார்.
தனக்கான பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் யசோதா பென் மனு தாக்கல் செய்தார். இருப்பினும் அம்மனு நிராகரிக்கப்பட்டது. நுண்ணறிவு பிரிவு விவரங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறி தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இரண்டாவது முறையாக மேல்முறையீடு மனுவை பிரதமர் மோடியின் மனைவி தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி மனைவிக்கு 10 போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். தான் பேருந்தில் செல்லும்போது தனக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் காரில் வருகிறார்கள் என்று கூறி தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து மோடியின் மனைவி சந்தேகத்தை எழுப்பினார்.
தனக்கான பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் யசோதா பென் மனு தாக்கல் செய்தார். இருப்பினும் அம்மனு நிராகரிக்கப்பட்டது. நுண்ணறிவு பிரிவு விவரங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறி தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இரண்டாவது முறையாக மேல்முறையீடு மனுவை பிரதமர் மோடியின் மனைவி தாக்கல் செய்துள்ளார்.
No comments :