அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் விடைத்தாள்களை புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய உள்ளாடைகள் மூலம் அவுட் ஆக்கிய விவகாரம் தொடர்பாக அரியானாவில் பல் டாக்டர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றபோது, அரியானாவில் 90 விடைகள் கசிந்ததும், நவீன செல்போன் தொழில்நுட்பத்துடன் கூடிய உள்ளாடைகள் மூலம் மாணவர்களுக்கு இந்த விடைகள் அனுப்பப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார், 2 பல் டாக்டர்கள், ஒரு எம்பிபிஎஸ் மாணவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து புளூடூத் உள்ளாடைகள் மற்றும் 90 கேள்விகளுக்கான விடைகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கும்பல் மூலம் குறைந்தது 9 மாணவர்கள் விடைகளை பெற்றிருக்கலாம் என்றும், இதற்காக லட்சக் கணக்கில் பணம் கொடுத்திருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
விடைகள் அவுட் ஆனது தெரியவந்ததும் அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, தேர்வு எழுதிய மாணவர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
இந்த கும்பல் பிற மாநிலங்களுக்கும் விடைகளை அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்ப உள்ளாடைகள் டெல்லியில் உள்ள ஒரு கடையில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றபோது, அரியானாவில் 90 விடைகள் கசிந்ததும், நவீன செல்போன் தொழில்நுட்பத்துடன் கூடிய உள்ளாடைகள் மூலம் மாணவர்களுக்கு இந்த விடைகள் அனுப்பப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார், 2 பல் டாக்டர்கள், ஒரு எம்பிபிஎஸ் மாணவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து புளூடூத் உள்ளாடைகள் மற்றும் 90 கேள்விகளுக்கான விடைகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கும்பல் மூலம் குறைந்தது 9 மாணவர்கள் விடைகளை பெற்றிருக்கலாம் என்றும், இதற்காக லட்சக் கணக்கில் பணம் கொடுத்திருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
விடைகள் அவுட் ஆனது தெரியவந்ததும் அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, தேர்வு எழுதிய மாணவர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
இந்த கும்பல் பிற மாநிலங்களுக்கும் விடைகளை அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்ப உள்ளாடைகள் டெல்லியில் உள்ள ஒரு கடையில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
No comments :